Madurai Bus Accident: மதுரை அருகே அரசு பஸ் மரத்தில் மோதி விபத்து: 10க்கும் மேற்பட்டோர் காயம்

மெக்சிகோவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

மதுரை: More than 10 people were injured when a government bus crashed into a tree near Madurai. மதுரை அருகே அரசு பேருந்து மரத்தில் மோதியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வாடிப்பட்டி அருகே உள்ள ராமராஜபுரம் கிராமத்திற்கு இன்று மாலை சொகுசு பேருந்து புறப்பட்டுச் சென்றது. மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை துவரிமான் அருகே சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கார் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பிரேக் பிடித்த போது பிரேக் வேலை செய்யாததால் அருகில் இருந்த மரத்தின் மீது மோதியதில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து, தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்த நாகமலை புதுக்கோட்டை போலீசார் காயமடைந்த அனைவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து விபத்து பகுதியில் இருந்தவர்கள் கூறுகையில், சொகுசு பேருந்து என்பதால் விபத்து நடந்த போது பயணிகள் அதிகம் இல்லாதது உயிர் சேதம் ஏற்படவில்லை.

அதே நேரத்தில், அரசு மகளிர் இலவச பேருந்து என்றால் விபத்து நடந்தபோது உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் என்றும் அரசு போக்குவரத்து கழகங்கள் பழுதடைந்த பேருந்துகளை இயக்கி வருவதால் பிரேக் பிடிக்காமல் மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.