Crime: சென்னையில் வயதான தம்பதி படுகொலை

சென்னையில் வயதான தம்பதி படுகொலை
சென்னையில் வயதான தம்பதி படுகொலை

Crime: மகளின் பிரசவத்துக்காக அமெரிக்கா சென்றுவிட்டு இன்று காலை சென்னை திரும்பிய தம்பதி வீட்டு டிரைவரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும், தம்பதியை கொலை செய்துவிட்டு செங்கல்பட்டு மாவட்டம் நெமிலிச்சேரியில் உள்ள அவர்களது பண்ணை வீட்டிலேயே புதைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் துவாரகா காலனியைச் சேர்ந்தவர் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் 60, இவரது மனைவி அனுராதா55. கடந்த மாதம் அமெரிக்காவிலுள்ள மகள் சுனந்தாவின் பிரசவத்திற்காக சென்றுவிட்டு, இன்று 07.05.2022 அதிகாலை 03.30 மணிக்கு அமெரிக்காவிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளனர்.

அங்கிருந்து இவர்களது ஓட்டுநரான கிருஷ்ணா என்பவர் இவர்களை அழைத்து வந்து வீட்டில் இறக்கியுள்ளார். தனது தாய், தந்தை இருவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்ததால், சந்தேகம் அடைந்த சுனந்தா, தனது உறவினரான திவ்யாவை (இந்திரா நகர் அடையார்) தொடர்புகொண்டு நேரில் சென்று பார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதன்பேரில், திவ்யா தனது கணவர் ரமேஷ்சுடன் 12.30 மணி அளவில் வீட்டை வந்து பார்க்கும்போது வீடு பூட்டி இருந்தது.

அக்கம் பக்கம் இருப்பவர்களின் உதவியுடன் பூட்டை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்ததில், இருவரும் இல்லாத காரணத்தால் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல், உதவி ஆணையர் கவுதமன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, புகார் கொடுத்த 6 மணி நேரத்தில் போலீசார் ஓட்டுநரை பிடித்தனர்.

சரியாக மாலை 6.30 மணியளவில் கார் ஓட்டுநர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும், ஆந்திர மாநிலம் ஓங்கோல் சோதனை சாவடியில் வைத்து அவர் ஓட்டி சென்ற காருடன் பிடித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, ஓட்டுனர் கிருஷ்ணாவிடம் மேற்கொண்ட விசாரணையில், ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா இருவரையும் மயிலாப்பூர் வீட்டிலேயே கொலை செய்து, கிழக்கு கடற்கரை சாலை, நெமிலிச்சேரி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்பட்டு வரும் இடத்திற்கு எதிரே ஸ்ரீகாந்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் புதைத்ததும் தெரிய வந்தது.

மேலும், வீட்டில் இருந்த பல லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.

கொலையாளி கிருஷ்ணா கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆடிட்டர் ஸ்ரீகாந்த் வீட்டில் பணியாற்றி வந்துள்ளார்.

இருவரின் சடலங்களும் கைப்பற்றிய மாமல்லபுரம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்

இதையும் படிங்க: Cyclone Asani: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக வலுப்பெறும்