கணவன் வீட்டில் கழிப்பறையில்லாததால் பெண் தூக்கிட்டு தற்கொலை

கணவன் வீட்டில் கழிப்பறையில்லாததால் பெண் தூக்கிட்டு தற்கொலை
கணவன் வீட்டில் கழிப்பறையில்லாததால் பெண் தூக்கிட்டு தற்கொலை

Suicide: கடலூரில் காதல் திருமணம் செய்துகொண்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் அரிசிபெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ரம்யாவும் கடலூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயனும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து இரண்டு வீட்டார் சம்மதத்துடன் கடந்த மாதம் அவர்களுக்கு திருமணமாகியுள்ளது.

இந்நிலையில் வீட்டில் கழிப்பறையில்லாததால் அவதியடைந்து வந்த ரம்யா, கழிப்பறை உள்ள வீடாக பார்க்கும் படி கார்த்திகேயனிடம் கூறி வந்துள்ளார். இது தொடர்பாக அவர்களிடம் தினமும் வாக்குவாதம் நடைபெற்று வந்துள்ளது. இதனையடுத்து ரம்யா நேற்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

ரம்யா தற்கொலை தொடர்பாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் தம்பதியான ரம்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் கடலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: VIVO Smartphone: விரைவில் இந்தியா வரும் புது விவோ ஸ்மார்ட்போன்