Student delivers baby : பள்ளி கழிவறையில் பிரசவம் பார்த்த மாணவி: 10 ஆம் வகுப்பு மாணவர் கைது

Class 11 Student : : பள்ளி அருகே உள்ள புதரில் புதிதாகப் பிறந்த குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது.

தமிழ்நாடு: Student delivers baby : இந்த சம்பவம் தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரியில் நடந்துள்ளது. சிறுமியை கருத்தரித்ததாக 10 ஆம் வகுப்பு மாணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை ய‌ன்று, ஒரு மாணவர், புதருக்குள் குழந்தை கிடந்ததைப் பார்த்து, பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் உடனடியாக இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், புதரில் சடலமாக கிடைந்த‌ குழந்தையின் உடலை மீட்டனர்.

பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடிய‌ சரியாக வெட்டப்படமால் இருந்தது தெரிய வந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் (Suspicious police), பள்ளியிலேயே குழந்தையை யாரோ பிரசவித்து, புதரில் கொண்டு வந்து வீசியிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தனர். போலீசார் உரிய விசாரணை நடத்தியபோது, ​​11 ஆம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்தது தெரிய வந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவியே வாக்குமூலம் அளித்துள்ளார்.

பள்ளி கட்டடத்தின் கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த மாணவி, குழந்தையை பள்ளி வளாகம் அருகே உள்ள புதரில் (A child in a bush near the school premises) வீசிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். விசாரணையில், வேறொரு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவரால் தான் கர்ப்பம் அடைந்ததாக கூறினார். சிறுமி தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் கல்லூரிகளில் இது போன்ற ஒரு சில பாலியல் சம்பவங்கள் நடை பெற்று வந்தன. ஆனால் அண்மைக் காலமாக பள்ளிகளில் (Recently in schools) மாணவி, மாணவர்களிடையே பாலியல் பிரச்னைகள் நடைபெறுவது அதிகரித்து பெறுவதும், இது பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கு வருவதும் வாடிக்கையாகி உள்ளது. இது போன்ற சம்பவங்களை தடுப்பது குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும். மாணவர்களிடையே இது தொடர்பான விழிப்புணர்ச்சியை மேற்கொள்ள வேண்டும். இது அவசியமும், அவசரமும் கூட என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.