Cutting sickle shaped cake Viral: கெத்தாக வெட்டிய கேக்.. கொத்தாக அள்ளியது போலீஸ்: திருவாரூரில் பரபரப்பு

திருவாரூர்: Cutting sickle shaped cake Viral: திருவாரூரில் அரிவாள் வடிவம் கொண்ட கேக்கை பேருந்து நிறுத்தத்தில் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ரவுடிகளும், இளைஞர்களும் கெத்து காண்பிப்பதற்காக தனது பிறந்த நாளை கேக் வெட்டும் கத்தியை தவிர்த்து அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

இவ்வாறு செய்வது அவர்களின் வீரத்தை காண்பிக்கவும், மக்களிடையே பயத்தை அறியச் செய்வதுமாக இருந்தது. இதனை தமிழக போலீசார் அதிரடியாக களத்தில் இறங்கி அரிவாளால் கேக் வெட்டுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரம் காட்டியது. இந்த கைது நடவடிக்கையால் சில மாதங்களாக இந்த சம்பவங்கள் நிகழாமல் இருந்து வந்தது.

இதனிடையே சென்னையில் பேருந்துகளில் மாணவர்கள் அரிவாளால் அடிக்கடி மோதிக்கொள்வதும், பஸ் தல என்ற பெயரில் வலம் வருவதும் அவ்வப்போது நடைபெற்று வந்தது. இதனையும் சென்னை மாநகர காவல் துறை (Chennai City Police) அதிரடியாக களத்தில் இறங்கி மாணவர்களை கைது செய்து அதிரடி காண்பித்து கட்டுக்குள் கொண்டுவந்தது.

இந்நிலையில், தற்போது திருவாரூரில் அரிவாளை தவிர்த்து, அரிவாள் வடிவத்தில் கேக் வெட்டி இளைஞர்கள் கொண்டாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்த பேரளம் பேருந்து நிறுத்தத்தில், அதே பகுதி வாய்கால் தெருவை சேர்ந்த முருகன் என்பவரது மகன் மாதவன் என்பவரின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். அந்த பேருந்து நிலையத்தில் பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, அரிவாள் வடிவம் கொண்ட கேக்கை பேருந்து நிறுத்தத்தில் வெட்டி கொண்டாடி உள்ளனர்.

பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் என அனைவரும் பேருந்துக்காக காத்திருந்தனர். இந்த நேரத்தில் பொதுமக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் இடையே ஏற்படுத்தும் வகையில், கூக்குரலிட்டும் கூச்சலிட்டும் இளைஞர்கள் கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர்.

இந்த கொண்டாட்டத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக (Social Medias Viral) பரவி வருகிறது. இதனைத்தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக பேரளம் போலீசார் அதிரடி நடவடிக்கை ஈடுபட்டனர். பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக கேக் வெட்டி கெத்து காட்டிய அஜய் குமார்(27), மணிகண்டன் (19), விஷ்ணு (19), பிரசாத் (26), ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தனது பிறந்த நாளை கொண்டாடி தலைமறைவான மாதவன் மற்றும் மோகன்ராஜ் என்பவரையும் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.