67-year-old man died during intercourse : பெண்ணுடன் சேர்ந்திருந்தப் போது போது 67 வயது முதியவர் மரணம்: பெண்ணின் கணவர் உடலைக் அப்புறப்படுத்த‌ உதவி

பெங்களூரில் 67 வயது முதியவர் ஒருவர் தனது வீட்டில் வேலை செய்யும் பெண்ணுடன் சேர்ந்திருந்தப் போது மாரடைப்பால் (67-year-old man died during intercourse) உயிரிழந்தார். பிடிபட்டுவிடுவோமோ என்ற அச்சத்தில் அந்த பெண் தனது கணவர் மற்றும் சகோதரருடன் சேர்ந்து ஆணின் உடலை அப்புறப்படுத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

பெங்களூரு போலீசார் பிளாஸ்டிக் பையில் 67 வயது முதியவர் சடலத்தை கண்டுபிடித்த ஒரு வாரத்திற்குப் பிறகு, மரணம் குறித்த விசாரணையில், அந்த நபர் தனது வீட்டில் வேலை செய்யும் பெண்ணுடன் சேர்ந்திருந்தப் போது (Having sex with a woman who works at his house) கொள்ளும்போது மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்படுகிறது. அவரின் உடலை அந்தப் பெண், அவரது கணவர் மற்றும் சகோதரர் ஆகியோர் உடலை அப்புறப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

67 வயதான தொழிலதிபர் தனது 35 வயதுடைய வீட்டில் வேலை செய்யும் பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். நவம்பர் 16 ஆம் தேதி அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று, அவருடன் சேர்ந்திருந்தப் போது மாரடைப்பால் படுக்கையில் இறந்ததாக (Died in bed of heart attack) தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜே.பி.நகரில் உள்ள புட்டேனஹள்ளியில் (JP Nagar Puttenahalli) வசிக்கும் பால சுப்பிரமணியன் என அடையாளம் காணப்பட்ட இவர், நவம்பர் 16-ம் தேதி தனது பேரனை பேட்மிண்டன் வகுப்புக்கு விடுவதற்காக தனது வீட்டில் இருந்து புறப்பட்டார். மாலை 4.55 மணியளவில், பாலசுப்பிரமணியன் தனது மருமகளுக்கு டயல் செய்து, தன‌க்கு சில தனிப்பட்ட வேலை இருப்பதால் வீட்டிற்கு வர தாமதமாகும் என்று தெரிவித்துள்ளார்.

இதன் பிறகு நீண்ட நாட்களாக பாலாவின் குடும்பத்தினர் அவரைத் தொடர்பு கொள்ளாததால், அவரது மகன் சுப்பிரமணிய புரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காணாமல் போன புகார் அளிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, சந்தேகத்திற்கிடமான நிலையில் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பெட் ஷீட்டில் கட்டியிருந்த சடலத்தை போலீசார் கண்டுபிடித்தனர் (Police found the body wrapped in plastic covers and bed sheets).

இந்த சம்பவம் வெளியில் வந்தால் சமூகத்தில் தன் இமேஜ் கெட்டுவிடும் என அஞ்சிய அந்த பெண், உடனடியாக கணவன் மற்றும் சகோதரனை அழைத்துள்ளார். பெண்ணும் அவரது உறவினர்களும் தொழிலதிபரின் உடலை பிளாஸ்டிக் பையில் அடைத்து ஜே.பி.நகரில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் வீசியதாக கூறப்படுகிறது (It is said that it was thrown at a secluded place in JP Nagar).

விசாரணையில், அந்த பெண் தனது 67 வயது தனது தோழரின் உடலை அப்புறப்படுத்தியதை ஒப்புக்கொண்டார். அவர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்யக்கூடும் என அஞ்சிய வீட்டார், கணவர் மற்றும் சகோதரர் (Husband and brother) உதவியுடன் சடலத்தை பிளாஸ்டிக் பையில் அடைத்து சாலையில் வீசியுள்ளார்.

பால சுப்பிரமணியன் தனது வீட்டில் வேலை செய்த பெண்ணுடன் நீண்ட நாட்களாக தொடர்பு (It has come to light that he had been having an affair with a woman) வைத்திருந்ததாகவும், அவர் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வருவதும் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு பாலாவுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.