T.Rajender returns to Chennai: சென்னை திரும்பும் டி.ராஜேந்தர்

சென்னை: T.Rajender returns to Chennai: நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் வயிற்றில் ரத்தக்கசிவு காரணமாாக உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நிலையில், சிகிச்சை முடிந்து நாளை சென்னை திரும்புகிறார்.

நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் டி.ராஜேந்தர். இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் (Chennai Private Hospital) அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஜூன் 14ம் தேதி, வயிற்றில் ரத்தக்கசிவு காரணமாாக உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

அவருடன் மனைவி உஷா ராஜேந்தர், மகன்கள் சிம்பு (Actor Simbu), குறளரசன் உள்ளிட்ட குடும்பத்தினர் சென்றிருந்தனர். தனது தந்தைக்கு சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, குடும்பத்தினரை அமெரிக்காவில் விட்டு விட்டு, தனது படப்பிடிப்பு பணிகளை (Cinema Shooting) முடிப்பதற்காக சென்னை திரும்பினார் சிம்பு. சிகிச்சை முடிந்து குணமான டி.ராஜேந்தர் குடும்பத்துடன் அங்கு ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில், பூரண குணமடைந்து, குடும்பத்தினருடன் ஜூலை 22ம் தேதி (நாளை) அதிகாலை 2 மணியளவில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை (Chennai International Airport) அவர் வந்தடைகிறார். இந்த தகவலால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, டி.ராஜேந்தர் தன் மகன்களான சிம்பு, குரளரசன் மற்றும் பேரனுடன் உரையாடும் காட்சியும் சமூக வலைதளத்தில் (Social Media Viral) வைரலானது. அதில் சிம்பு தன் அப்பாவை ஆர தழுவி பாசத்தை வெளிப்படுத்தினார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.