Suriya out of Bala’s Vanangaan: பாலாவின் வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகல்

சென்னை: Suriya has walked out of Bala’s Vanangaan. பாலா இயக்கத்தில் உருவாகும் வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இயக்குனர் பாலா வெளியிட்டுள்ள கடிதத்தில்,என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ‘வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.

என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.

எனவே ‘வணங்கான்’ திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும், அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது.

‘நந்தா’வில் நான் பார்த்த சூர்யா, ‘பிதாமகன்’-இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி ‘வணங்கான்’ படப்பணிகள் தொடரும் என தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் சூர்யாவின் ரசிகர்களிடையேயும், திரையுலகத்திலும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.