Roja’s daughter is introduced as heroine: கதாநாயகியாக கலக்கப்போகும் நடிகை ரோஜாவின் மகள்.. விரைவில் அறிவிப்பு

சென்னை: Actress Roja’s daughter is introduced as the heroine: தெலங்கானா சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 90களில் திரைத்துறையில் கொடிகட்டி பறந்த நடிகை ரோஜா, தமிழில் செம்பருத்தி, சூரியன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பு ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர். இவர் தெலுங்கு மொழிப் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

பின்னர், ஆந்திர மாநிலத்தில் அரசியலில் குதித்தார். தனது பேச்சுத்திறமையாலும் மக்களை கவர்ந்த நடிகை ரோஜா, தற்போது ஆந்திராவின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையில் தற்பொழுது சுற்றுலாத்துறை அமைச்சராகவும் உள்ளார்.

இவர் சினிமா இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில், ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா விரைவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா, இதற்காக தற்போது அமெரிக்காவில் உள்ள பிரபலமான கல்லூரி ஒன்றில் நடிப்பு, இயக்கம், எழுதுதல் என பயிற்சி பெற்று வருகிறாராம்.

ஏற்கனவே இவர் எழுதிய ’தி ஃபிளேம் இன் மை ஹார்ட்’ எனும் புத்தம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த புத்தகத்திற்காக சமீபத்தில் தென்னிந்திய அளவில் சிறந்த எழுத்தாளருக்கான விருதையும் அன்ஷுமாலிகா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் தனது மகள் கதாநாயகியாக நடிக்கப்போகிறார் என்பதை ரோஜா மற்றும் அவரது கணவரும் இயக்குனருமான செல்வமணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக திரைத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.