Pooja Hegde lamentation: அந்த படத்தில் நடித்திருந்தால்.. பூஜா ஹெக்டே புலம்பல்

சென்னை: Pooja Hegde laments about Seetha Ramam: சீதா ராமம் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தால் பட வாய்ப்புகள் குவிந்திருக்கும் என நடிகை பூஜா ஹெக்டே புலம்பி வருகிறார்.

நடிகை பூஜா ஹெக்டே கடந்த 2010ம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர். இவர் தமிழ் திரையுலகில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

நடிகை பூஜா ஹெக்டே சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்களை பாலோவர்களாக வைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் 21.1 மில்லியன் பின்தொடர்பவர்களையும், 1435 புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளையும் அவர் வைத்துள்ளார்.
அதேபோல், டுவிட்டர் பக்கத்தில் 4.6 மில்லியன் பின்தொடர்பவர்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து பெரும்பாலான தெலுங்கு படங்களில் ஆர்வமாக நடித்து வந்தார் நடிகை பூஜா ஹெக்டே. முன்னணி நடிகர்களான பிரபாசுடன் ‘ராதே ஷ்யாம்’ என்ற படமும், விஜய்யுடன் நடித்த ‘பீஸ்ட்’ படமும் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை.

இதனிடையே கொரோனா தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு ஓய்வில் இருந்து வந்தார். அப்போது, சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்ததால், அவரால் நடிக்க முடியாமல் போனது. அவருக்கு பதிலாக மிரினல் தாக்கூர் நடித்திருந்தார்.

தற்போது அந்த படம் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. படத்தில் கதாநாயகியாக நடித்த மிரினல் தாக்கூருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இந்தநிலையில், அந்தப் படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து இருந்தால் இந்நேரம் வேறு லெவலில் இருந்திருப்பேன் எனவும், அப்படி ஒரு வாய்ப்பு இனி எனக்கு வருவது கடினம் தான் என்று தனது சக நண்பர்களிடம் பூஜா ஹெக்டே புலம்பி வருகிறாராம்.