Ranjith Condemned The Tamil Nadu Police: தமிழக போலீசாருக்கு பா.இரஞ்சித் கண்டனம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்துக்கு (Ranjith Condemned The Tamil Nadu Police) உட்பட்ட இறையூர் என்ற கிராமத்தில் உள்ள வேங்கை வயல் பகுதியில் பட்டியில் இனத்தவர்களும் வசித்து வருகின்றனர்.
அங்குள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு வேங்கை வயல் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இது தொடர்பாக போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசராணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இயக்குனர் பா.இரஞ்சித் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், ‘‘தொடரூம் சமூக அநீதி! புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரணை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனங்கள்’’ என்று பதிவிட்டுள்ளார். இவரது கருத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.