கன்னட திரைப்படத்துறை இப்போது ஒரு பொற்காலத்தை கடந்து கொண்டிருக்கிறது, இந்த ஆண்டு சாண்டல்வுட்டில் வெளியான பெரும்பாலான படங்கள் நூறு கோடி கிளப்பை தாண்டி நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
தற்போது கிச்சா சுதீப் நடித்துள்ள விக்ராந்த் ரோனா (Vikrant Rona) படத்தின் ரிலீஸுக்கான கவுன்ட் டவுன் தொடங்கியுள்ள நிலையில் இந்த படமும் கோடி கிளப்பில் சேரும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில் சுதீப்பின் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. அதாவது, என்எப்டி (NFT) நிறுவனம் விக்ராந்த் ரோனாவை சுதீப்புடன் சந்தித்து பேச (Chance to meet Sudeep) வாய்ப்பு வழங்கவுள்ளது. இது சுதீப் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிச்சா சுதீப், அவரது மனைவி பிரியா சுதீப் (Priya Sudeep) மற்றும் ஒட்டுமொத்த விக்ராந்த் ரோனா படக்குழுவினரும், என்எப்டி அமைப்பினரும் சேர்ந்து சுதீப்புடன் சந்தித்து பேசம் வாய்ப்பு குறித்த தகவலை தெரிவித்துள்ளனர். என்எப்டி அமைப்பால் உருவாக்கப்பட்ட இந்த சிறிய சந்திப்பு பற்றி நடிகர் சுதீப்புக்கு எதுவும் தெரியாது. ஆனால் இப்போது ரசிகரிகளின் ஆர்வத்தை பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்எப்டி குழுவினரின் இந்த பணி அனைவருக்கும் த்ரில் தரும் என்பதில் உறுதியாக உள்ளேன் என்று நடிகர் சுதீப் கூறினார்.
சந்தித்து பேசும் வாய்ப்பு மூலம் நடிகர் சுதீப்புடன் ரசிகர்கள் அதிக நேரம் செலவிடலாம். ஆனால் சுதீப்புடன் சந்தித்து பேச வாய்ப்பு கிடைப்பதற்கு என்எப்டி உறுப்பினர் அட்டை (NFT Membership Card) கட்டாயம் இருக்க வேண்டும். இந்த உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்களுக்கு நடிகர் சுதீப்பை சந்தித்து பேசவும் நேரத்தை செலவிடவும் வாய்ப்பு கிடைக்கும்.
என்எப்டி உறுப்பினர் அட்டை பெற என்ன செய்ய வேண்டும் ?
என்எப்டி உறுப்பினர் சேர்க்கைக்கான போட்டி நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது அவ்வளவுதான். விக்ராந்த் ரோனாவின் ஓவியத்தை வரைந்து அதை kichchaverse.io இல் பதிவேற்றவும். இந்தப் போட்டியின் சிறந்த ஸ்கெட்சருக்கு என்எப்டி உறுப்பினர் அட்டை வழங்கப்படும். இந்த உறுப்பினர் அட்டையை பெறுபவர்கள் நடிகர் சுதீப்புடன் பேசுவதற்கான பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு, நேரத்தை செலவிடும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
இதனுடன், விக்ராந்த் ரோனா படத்தின் மூலம் வெளிநாடுகளில் கன்னடப் படம் திரையிடப்படுவது இதுவே முதல் முறை. விக்ராந்த் ரோனா பிரீமியர் ஷோ (premiere show) ஜூலை 27 அன்று துபாயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் என்எப்டி உறுப்பினர் இருக்க வேண்டும் என்று காபி அண்ட் பன் இன்னோவேஷன்ஸ் நிறுவனர் பிரியா சுதீப் கூறினார்.
நடிகர் சுதீப்பைத் தவிர, விக்ராந்த் ரோனா படத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் (Jacqueline Fernandez), நிருப் பண்டாரி, நீதா அசோக், ரவிசங்கர் கௌடா, வாசுகி வைபவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விக்ராந்த் ரோனா திரைப்படம் கன்னடம் மட்டுமின்றி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.