Sushant Singh Was Murdered: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டார்? அதிர்ச்சி தகவல்

மும்பை: வளர்ந்து வரும் நடிகர்களில் பிரபல இளம் (Sushant Singh Was Murdered) இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி தன்னுடைய அடுக்குமாடி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்டார். அவரது மரணம் பாலிவுட் வட்டாரங்களில் மட்டுமின்றி அவரின் குடும்பத்தாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் அவரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், போதைப்பொருள் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாகவும் அப்போதைய தகவல்கள் கசிந்தது. இதனால் மகாராஷ்டிரா மாநில போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சி.பி.ஐ. அமைப்புக்கு இந்த வழக்கு அதிரடியாக மாற்றப்பட்டது.

இதனை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்டவை நடிகரின் மரண தொடர்பான வழக்கை பல்வேறு வகையில் விசாரணை மேற்கொண்டு வந்தது. இதுவரையில் எந்த ஒரு துப்பும் கிடைக்காத நிலையில் தற்போது அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் பற்றிய அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. இவரின் உடலை பிரேத பரிசோதனை செய்த ரூப்குமார் என்பவர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை, அவரை யாராவது கொலை செய்திருக்கலாம் என்ற தகவலை கூறியிருப்பது பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ரூப்குமார் கூறும்போது, சுஷாந்த் சிங் உயிரிழந்த தினத்தில் எங்களது கூப்பர் மருத்துவமனைக்கு 5 சடலங்கள் வந்திருந்தது. அதில் ஒன்றாக விஐபி சடலம் என்றனர். நாங்கள் அங்கு போய் பார்த்த பின்னர்தான் அது சுஷாந்த் சிங் என்பது தெரியவந்தது. அவரின் உடலில் பல்வேறு அடையாளங்கள் இருந்தும், கழுத்து உள்ளிட்ட சில இடங்களில் காயங்கள் இருந்தது. எனவே பிரேத பரிசோதனை செய்யும் போது அதனை வீடியோ எடுத்திருக்க வேண்டும். ஆனால் உயர் அதிகாரிகள் வெறும் புகைப்படம் மட்டுமே எடுத்தனர். இதனால் நாங்களும் அப்படியே செய்துவிட்டோம்.

அப்போதே நாங்கள் இது தற்கொலை கிடையாது, கொலைதான் என்று முடிவு செய்து சீனியர்களிடம் தெரிவித்தோம், ஆனால் அதனை அவர்கள் கண்டு காணாமல் போய்விட்டனர் என்று கூறியுள்ளார். இவரது பேச்சு தற்போது பாலிவுட் வட்டாரங்களை பரபரப்பாக மாற்றியுள்ளது.