ஒரே நாளில் லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு !

கரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் வீச தொடங்கி உள்ளது.இந்நிலையில்,மகாராஷ்டிரா,கர்நாடகா,தமிழகம் போன்ற மாநிலங்களில் கரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது.

இந்த கொரோனா வைரஸ் வல்லரசு நாடுகளையே நடுங்க வைத்துள்ளது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஆட்டம் காட்டி வரும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் அனைவரிடத்திலும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்1,03,793 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 477 பேர் உயிரிழந்துள்ளனர்.