கரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது.இந்நிலையில்,அரசு அணைத்து மக்களும் தடுப்புசி போட்டுக்கொள்ள வலியுறுத்துகிறது.கரோனா பரவல் அதிகம் பரவியதால் பள்ளிகளும் மூடப்பட்டன.அணைத்து மாணவர்களும் ஆன்லைன் மூலம் வகுப்பு நடந்துவருகிறது.
தற்போது,ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஐஐடியில் பயிலும் மாணவர்கள் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 60 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா தொற்று பரவியதையடுத்து ஐஐடி வளாகத்தின் ஜி3 வளாகம் மைக்ரோ கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதித்த மாணவர்களில் பெரும்பாலானோர் சண்டிகார், குஜராத், ஜெய்பூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.