சென்னை: லஞ்சம் கொடுக்காததால் போலீசார் (Dadi Balajis Wife Joins Bjp) தன்னை கைது செய்ததாக நடிகர் தாடி பாலாஜியின் மனைவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பக்கத்து வீட்டு பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பதற்காக பா.ஜ.க.வில் சேரப்போவதாகவும் தாம் பெண்களுக்காக பாடுபட இருப்பதாகவும் தனது பெருமை பற்றி பேசினார்.
சென்னை, கொளத்தூர் சாஸ்திரி நகர் பகுதியில் வசித்து வருகிறார் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா. இவரது வீடு அருகே இருக்கும் மணி என்பவருக்கு இடையில் சில நாட்களாக பிரச்சனை நிலவி வருகிறது. இந்நிலையில், கடந்த 28ம் தேதி மணியின் காரை நித்தியா கற்களால் சேதப்படுத்தியதாக சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகியது. இது பற்றி நித்தியா மீது புகார் அளிக்கப்பட்டு மாதவரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தார்.
இந்நிலையில், தன் மீது பொய்யான வழக்கில் கைது செய்யப்பட்டு விட்டதாக நித்தியா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அப்போது தான் பெண்களுக்காக குரல் கொடுப்பதற்காக பா.ஜ.க.வில் இணைய இருப்பதாகவும் கூறினார்.