என்னது.. மதுரை ஆதினத்தின் புதிய பீடாதிபதி நித்யானந்தாவா !

மதுரை ஆதினத்தின் 292 வது பீடாதிபதி அருணகிரிநாதர் வயது முதிர்வு காரணமாக காலமானார்.தற்போது 293வது பீடாதிபதியாக தான் பதவியேற்று கொண்டுள்ளதாகவும் பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளதாகவும் முகநூலில் நித்தியானந்தா அறிவித்துள்ளார்.

நித்யானந்தா சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்.அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பார்.மேலும் அவர் தற்போது கைலாசா என்னும் நாட்டில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கூறிவருகிறார்.

தற்போது 293மதுரை ஆதினம் என கூறி தனக்கான பெயரை 293வது ஜெகத்குரு மஹா சன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் எனவும் அவர் அறிவித்துள்ளார்.