தமிழகத்தில் இருந்து 2 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு !

டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.செப்டம்பர் 5ஆம் தேதியன்று இந்த விருது குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகிறது.

இந்த வருடம் மொத்தம் 44 ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.இதில் தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வாகியிருக்கின்றனர்.

திருச்சி மாவட்டம், பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஆஷா தேவி, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை லலிதா ஆகிய இருவரும் நல்லாசிரியர் விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.