chicken biryani: சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இளம் இயக்குநர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.!

Chicken Biryani
சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இளம் இயக்குநர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.!

chicken biryani; வியாசர்பாடி ரத்தினம் தெருவைச் சேர்ந்த ரஞ்சித்குமார்(22) என்ற தனியார் கல்லூரியில் விஸ்.காம் மாணவர் குறும்படங்களை இயக்கி வந்துள்ளார். இவர் நேற்று இரவு மது குடித்துவிட்டு பிரியாணி சாப்பிட்டு விட்டு வந்து படுத்தவர் உடல்நிலை சரியில்லாமல் ஸ்டான்லி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வியாசர்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரஞ்சித்தின் உடலை பிரேத பரிசோதனை செய்தபிறகே அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தகவல்.

இதனையடுத்து, அலறியடித்துக்கொண்டு குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரஞ்சித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதனிடையே, பிரியாணி சாப்பிட்டதாலே ரஞ்சித் உயிரிழந்ததாக உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே உயிரிழப்பிற்கான காரணம் தெரிய வரும் என கூறப்படுகிறது. ஏற்கனவே ஆரணியில் சிக்கன் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Health Workers Fight: 500 ரூபாய்க்காக குடுமிப்பிடி சண்டை..!