weather report tn : தமிழகத்தில் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல், பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி விழுப்புரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு இன்று லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் நாளை அதாவது மார்ச் 13ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் ராமநாதபுரம்,திருநெல்வேலி,தென்காசி,தூத்துக்குடி,தேனி,கன்னியாகுமரி,சிவகங்கை,விருதுநகர்,திண்டுக்கல்,மதுரை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டெல்டா மாவட்டங்களாகிய தஞ்சை,திருவாரூர்,நாகப்பட்டினம்,மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.weather report tn
இதையும் படிங்க : Women Auto driver: முதியோருக்கு இலவச ஆட்டோ சேவை
மேலும் சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
(chances of rain in tamilnadu )