Virat Kohli: 2வது டெஸ்ட் போட்டியில் விராட் ரசிகர்கள் அட்டுழியம்

watch-fans-enter-field-take-selfie-with-virat-kohli-in-security-breach-on-day-2-of-2nd-india-sri-lanka-test
விராட் ரசிகர்கள் அட்டுழியம்

Virat Kohli: 2வது டெஸ்ட் போட்டியின் போது விளையாட்டு மைதானத்திற்குள் மூன்று ரசிகர்கள் பாதுகாப்பை மீறி நுழைந்து விராட்டுடன் செல்பி எடுத்துள்ளனர்.

இந்தியா மற்றும் இலங்கை இடையேயான இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணியில் விளையாடிய முகமது ஷமியின் பந்து வீச்சில் குசல் மெண்டிஸ் காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். இதனால் போட்டி சிறுது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது . அப்போது கோலி ஸ்லீப் இடத்தில் நின்று கொண்டிருந்தார்.

அதை பார்த்த ரசிகர்கள் இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று எண்ணி சந்தோஷத்திலும் ஆர்வத்திலும் பாதுகாப்பு வேலியை உடைத்து விளையாட்டு மைதானத்திற்குள் நுழைந்து கோலியுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

பின்னர் பாதுகாப்பு பணியாளர்கள் விரைந்து சென்று ரசிகர்களை வெளியேற்றினர். இச்சம்பவம் அந்த இடத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: MK Stalin: பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்