விஜே அர்ச்சனா மீண்டும் நிகழ்ச்சி தொகுத்து வழங்க இன்னும் சிறிது காலம் ஆகும் !

விஜே அர்ச்சனா சின்னத்திரையில் மிகவும் பிரபலம்.மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.பிக் பாஸ் பங்கேற்ற பிறகு அவருக்கு சமூக வலைத்தளங்களில் அதிக ட்ரோல்கள் வந்தன.

சமீபத்தில் அர்ச்சனாவுக்கு மூளையில் செரிப்ரோஸ்பைனல் திரவக் கசிவு பிரச்சனை ஏற்பட்டது.மேலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மேலும் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.

சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். எப்போது தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவீர்கள் என ரசிகர்கள் கேட்டனர்.அதற்கு பதில் அளித்த அவர்,எனது வலது கால் தொடையில் 16 தையல்கள் போடப்பட்டுள்ளன. மருத்துவர்கள் அங்கிருந்து தோல், தசைகளை வெட்டி எடுத்து அதை என்னுடைய செரிப்ரோஸ்பைனல் திரவக் கசிவை அடைக்கப் பயன்படுத்தியுள்ளனர்.

என் கால்கள் இன்னும் பலவீனமாக இருக்கிறது. எனவே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க சில நாட்கள் ஆகும் என்று தெரிவித்தார்.