உற்சாகத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் !

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பலரும் சுயேட்சையாக போட்டியிட்டனர்.

விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 49 பேர் ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம் கருபடித்தட்டை காந்தி நகர் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மக்கள் இயக்க நகர செயலர் பிரபு என்பவர் வெற்றி பெற்றுள்ளார்

மொத்தம் 65 வாக்குகள் பெற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகி பிரபு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டில் வடபாதியை சேர்ந்த ரீனா புருஷோத்தமன் என்பவர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இந்த வெற்றியை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.மேலும் எதிர்காலத்தில் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க : அக்.14 முதல் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை