Venkaiah Naidu: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா

venkaiah naidu
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா

Venkaiah Naidu: குடியரசு துணைத்தலைவர் எம் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

இதையடுத்து, கடந்த இரண்டு, மூன்று நாட்களாக குடியரசு துணைத் தலைவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள துணை குடியரசுத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடுவுக்கு, இன்று கோவிட் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, அவர் ஒரு வாரம் சுய தனிமையில் இருக்க முடிவு செய்துள்ளார். தன்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார் என்று குடியரசுத் துணைத்தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: New virus: இங்கிலாந்தில் புதிய கொரோனா மாறுபாடு கண்டுபிடிப்பு