வேல் யாத்திரையை பாஜக கைவிடுவது நல்லது – அமைச்சர் ஜெயக்குமார்

வேல் யாத்திரையை பாஜக கைவிடுவது நல்லது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பாஜகவின் வேல் யாத்திரை போன்ற ஊர்வலங்களால் கரோனா அதிகமாக பரவும் நிலை ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை.

பொருளாதார மேம்பாட்டுக்காகவே தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வேல் யாத்திரையை பாஜக கைவிடுவது நல்லது. சட்டத்தை மீறினால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.