காய்கறி வாகனங்கள் இயங்காது – லாரி உரிமையாளர்கள் சங்கம் !

லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் டிசம்பர் 27ஆம் தேதி முதல் காய்கறி வாகனங்கள் இயங்காது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.அயனம்பாக்கத்தில் நடந்த லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

பால், டீசல், மெடிக்கல் வாகனங்கள் மட்டுமே இயங்கும். காய்கறி லாரிகள் இயங்காது.இதனால், 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான வருவாய், அரசுக்கு ஏற்படவுள்ளது. அரசு எங்களை அழைத்து சுமுக பேச்சுவார்த்தை நடத்தி, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.