விவசாயிகள் பிரச்சனை மத்திய அரசு ஆலோசனை!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நரேந்திரசிங் தோமர், பாஜக தலைவர் ஜேபி நட்டா வீட்டில் ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனை ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தது.

டெல்லி-ஹரியானா எல்லையான சிங்குவில் பாரதிய கிஷான் சங்கத்தின் பஞ்சாப் மாநிலத் தலைவர் சுர்ஜித் சிங் பால் ஞாயிற்றுக்கிழமை (நவ.29) மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்தப் பிரச்னையை பேசி தீர்க்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. அவர்கள் எங்களது கோரிக்கைகளை ஏற்கவில்லை, மாறாக நிபந்தனைகள் விதிக்கின்றனர்.

பின்னர், விவசாய சங்கங்களுடன் டிசம்பர் 3ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு மத்திய அரச தயாராக உள்ளது என்று வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கூறினார்.