யூனியன் வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராத

வர்த்தக வங்கிகளின் மோசடி வகைப்பாடு மற்றும் அறிக்கை அளித்தல் தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

ஆனால், இந்த வழிகாட்டுதல்களை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா பின்பற்றாதது கண்டுபிடிக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சிவப்புக் கொடி கணக்குகளை முறையாக வகைப்படுத்தாதது, வருடாந்திர அறிக்கையில் பாதுகாப்பு ரசீதுகளுக்கான வழங்கல்களை வெளியிட அந்த வங்கி தவறிவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கு எதிரானது என்பதால் இவ்விவகாரம் தொடர்பாக ஏன் அபராதம் விதிக்கக் கூடாது என விளக்கம் கேட்டு யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா நிர்வாகத்திற்கு ரிசர்வ் வங்கி நோட்டீஸ் அனுப்பியது.

இதைத்தொடர்ந்து யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, ரிசர்வ் வங்கியிடம் விளக்கம் கொடுத்தது. யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா தரப்பு வாதத்தை கேட்டபிறகு அந்த வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.