மக்கள் கவனத்திற்கு..4 நாட்கள் போக்குவரத்து மாற்றம் !

தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தின் முன்பு அமைந்துள்ள காவலர் நினைவிடத்தில் வருகிற 21-ந்தேதி காவலர் நினைவு நாள் கடைபிடிக்கப்படுகிறது.மேலும் மெரினா கடற்கரை சாலையில் 4 நாட்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் இலகு ரக வாகனங்கள் மற்றும் 2 சக்கர வாகனங்கள் காரணீஸ்வரர் கோவில் தெரு சந்திப்பில் இடது புறம் திரும்பி காரணீஸ்வரர் பகோடா தெரு, அம்பேத்கர் பாலம் மற்றும் நடேசன் சந்திப்பு வழியாக டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை அல்லது காமராஜர் சாலை செல்லலாம்.

சாந்தோம் சாலை வழியாக காந்தி சிலை நோக்கி வரும் மாநகர பஸ்கள் சாந்தோம் சிக்னலில் இடதுபுறம் திரும்பி கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர் பிரதான சாலை மற்றும் பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை மெயின் ரோடு இடது புறம் திரும்பி ராதாகிருஷ்ணன் சாலை சென்று அவரவர் இலக்கை அடையலாம்.

கண்ணகி சிலையில் இருந்து காமராஜர் சாலை வழியாக சாந்தோம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் லாயிட்ஸ் சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி கடற்கரை சர்வீஸ் சாலை வழியாக கலங்கரை விளக்கம், காரணீஸ்வரர் கோவில் சந்திப்பிற்கு செல்லலாம்.

இதையும் படிங்க : தமிழகத்தில் இன்று 1,245 பேருக்கு கொரோனா !