நடிகை ராஷி கண்ணாவுக்கு பர்த்டே..!

கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிஸி நடிகையாக இருந்து வருபவர் ராஷி கண்ணா.தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் அறிமுகமானவர். அந்தப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாராதான் கதாநாயகி என்றாலும், அழகு பதுமையாக வந்து அசத்தியிருப்பார் ராஷி.. இதனைத்தொடர்ந்து அயோக்கியா, அடங்கமறு, சங்கத்தமிழன், அரண்மனை 3, துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ’சர்தார்’, ’மேதாவி’, ’சைத்தான் கே பச்சா’ஆகிய படங்களையும் கைவசம் வைத்திருக். மும்பையைச் செர்ந்த ராஷி கண்ணா, முதலில் தெலுங்கு திரையுலகில் தான் அறிமுகமானார். 2013 ஆம் ஆண்டு அவர் முதலில் நடித்து வெளியான ‘மெட்ராஸ் கஃபே’ திரைப்படம் வெற்றிபெற்றதை அடுத்து லக்கி ஹீரோயினாக பார்க்கப்பட்டார்.

அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களில் நடித்து திரையுலகில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டார். இனிமையான குரலுக்குச் சொந்தமான் ராஷி, நடிப்பதோடு நிறுத்திவிடாமல் , ’ஜோரு’, வில்லன், பாலகிருஷ்ணுடு, ஓரந்த அனுகுந்துன்னாரு உள்ளிட்ட படங்களில் பாடல்களும் பாடியுள்ளார்..

பியூட்டி குயின் ஆக திரையுலகில் வலம் வரும் ராசி கண்ணா, இன்று தனது 31 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அவரது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ட்ரெண்டாக்கி வருகின்றனர்.