சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் மூலம் வசூல்

சுங்கச்சாவடிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், வரி ஏய்ப்பைக் கட்டுப்படுத்தவும் ஃபாஸ்ட் டேக் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

நாளை (ஜன.1) முதல் அனைத்துச் சுங்கச்சாவடிகளும் ஃபாஸ்ட் டேக் மூலமாக மட்டுமே டோல் கட்டணம் பெறவேண்டும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இதற்கான காலக்கெடுவை பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது