தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு

கொரோனா விதிகளை பின்பற்றி நடக்கும் வேட்புமனுத் தாக்கல் காலை 11 மணிமுதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.

வேட்பு மனுக்களை திரும்பப்பெற வரும் 22ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினமே வேட்பாளர்களின் இறுதிப்பட்டியில் வெளியிடப்பட உள்ளது.சட்டமன்றத் தேர்தலுடனே காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய இன்றே கடைசிநாளாகும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.