tn govt updates : தமிழகத்தில் உள்ள கோயில் பிரசாதங்களில் ஆவின் நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அறிவுறுத்தியுள்ளது.
கோவில்களில் பிரசாதம் தயாரிக்க மற்றும் பிற சேவைகளுக்கு வருகின்ற ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட நெய் மற்றும் வெண்ணெய்யை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணைப்பிறப்பித்துள்ளது.
திருக்கோவில்களில் விளக்கேற்றவும், நெய்வேத்திய பிரசாதம் தயார் செய்யவும் பயன்படுத்தப்படும் வெண்ணை, நெய் போன்ற பொருட்களை ஆவின் நிறுவனம் மூலம் மட்டுமே கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.tn govt updates
இந்த ஆணை ஜனவரி 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Indian Air Force’s MiG-21 Fighter Jet Crash : இந்திய போர் விமானம் விபத்து !