ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி கிடைத்த மேலும் நான்கு மாவட்டங்கள் !

கரோனா தொற்று இருக்கும் இந்த காலகட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தடைபட்டுவிடுமோ எனப் பொதுமக்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், வீரர்கள் கவலையில் இருந்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தரவிட்டது.மேலும் ,மதுரை உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி அளித்ததைப் போல தங்களது பகுதியிலும் அனுமதியளிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் ஆணையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று கிராமங்களிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 13 கிராமங்களிலும், சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமத்திலும், வேலூர் மாவட்டத்தில் 25 கிராமங்களிலும் வருகின்ற 14ஆம் தேதி முதல் 31ஆம் தேதிவரை ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு, எருது விடும் விழா ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கரோனா காலத்தில் உள்ள நிபந்தனைகளை பின்பற்றி போட்டிகளை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.