அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4,000 உதவித்தொகை

அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது

திருக்கோயில்களில் மாதச் சம்பளம் பெறாமல் பணியாற்றும் ஒவ்வொரு திருக்கோயில் ஊழியருக்கும் ரூ.4,000 உதவித்தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உதவித்தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் திருக்கோயில் பணியாளர் அல்லாத திருக்கோயிலின் மூலம் உரிமம் பெற்றோருக்கும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், சுமார் 14,000 திருக்கோயில் ஊழியர்கள் மற்றும் திருக்கோயில் மூலம் உரிமம் பெற்ற இதர பணியாளர்கள் பயனடைவார்கள் என்றும், இத்திட்டம் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினமான ஜூன் மாதம் மூன்றாம் தேதியன்று தொடங்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.