Covid: தமிழகத்தில் 86 பேருக்கு கொரோனா

தினசரி கொரோனா பாதிப்பு
தினசரி கொரோனா பாதிப்பு

Covid: தமிழகத்தில் கொரோனா 3-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே தொற்று பாதிப்பு வேகமாக சரிந்து வருவது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 51 ஆயிரத்து 996- ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 204 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக இன்று ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 40 ஆயிரத்து 825- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: “என் மனைவி பெண்ணே அல்ல” – கணவன் தொடர்ந்த விநோதமான விவாகரத்து மனு

தலைநகர் சென்னையில் 33 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் 1054- பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 809 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1 ஆயிரத்து 597 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64 லட்சத்து 46 ஆயிரத்து 221 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 980 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 66 ஆயிரத்து 886 என்ற அளவில் உள்ளது.

இதையும் படிங்க: Hijab Case: பெங்களூருவில் நாளை முதல் பொதுஇடங்களில் போராட்டம் நடத்த தடை