கல்லூரி மாணவர்களுக்கான அறிவிப்பு..வரும் 9 ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம் !

கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.கடந்த வருடம் முதல் பள்ளி மற்றும் கல்லூரி மூடப்பட்டன.

தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் வரும் 9-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என உயர்க்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 1 முதல் நடைபெற்று வருகிறது.கொரோனா தொற்று பரவல் காரணமாக முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.