TN Assembly: தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது

the-debate-on-the-budget-in-the-tn-assembly
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது

TN Assembly: தமிழக சட்டசபையில் கடந்த 18-ந்தேதி 2022-2023-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

அடுத்த நாள் (19-ந்தேதி) 2022-2023-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து, பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

அதன்பின்னர், கேள்வி நேரம் நடைபெறுகிறது. கேள்வி நேரம் முடிந்ததும், பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள்.

நாளையும் (செவ்வாய்க்கிழமை), நாளை மறுநாளும் (புதன்கிழமை) பட்ஜெட் மீதான விவாதம் தொடர்கிறது. வருகிற 24-ந்தேதி, 2022-2023-ம் ஆண்டின் செலவிற்கான முன்பண மானிய கோரிக்கையும், 2021-2022-ம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையும் அவை முன் வைக்கப்பட இருக்கிறது.

மேலும், நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரின் பதில் உரையும் இடம்பெறுகிறது.

இதையும் படிங்க: Dishti: கண்திருஷ்டி பற்றிய கலக்கம் இல்லாமல் வாழ இதை செய்யுங்கள்..!