தமிழக மீனவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து போராட்டம்

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்கள் இன்று இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதற்காக 4 பேரின் உடல்களும் இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் இருந்து கப்பலில் எடுத்து வரப்படுகின்றன.

நான்கு தமிழக மீனவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் இலங்கை அரசையும் மத்திய அரசையும் கண்டித்து ஜனவரி 25 ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

4 மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளனர்.