ஏ.ஆர்.ரகுமானை இழிவுபடுத்திய தெலுங்கு நடிகர்

ஒரு தனியார் தெலுங்கு ஊடகத்திற்கு பேட்டியளித்த பாலகிருஷ்ணா, ஏ.ஆர். ரகுமான் பற்றிய கேள்விக்கு அவர் ஆஸ்கர் விருது வாங்கி இருக்கலாம், ஆனால் அவர் யார் என்றே எனக்கு தெரியாது என்றும், பாரத ரத்னா போன்ற விருதுகள் என்.டி.ஆரின் கால் விரலுக்கு சமம் என்றும் கூறியுள்ளார். 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியதோடு, பாலகிருஷ்ணாவின் இந்த கருத்துக்கு கடும் கண்டனங்களும் எழுந்து வருகின்றன. பாலகிருஷ்ணா தன் படங்களுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமானை அணுகியதாகவும் அவர் மறுத்ததால் எழுந்த காழ்ப்புணர்ச்சியில் இப்படி பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.


மேலும் எந்தவொரு உயரிய விருதும் தன்னுடைய குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைக்கு ஈடாகாது, என்றும் பாலகிருஷ்ணா அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.