ரயிலில் இருந்து குதித்த இளைஞர் – உயிரிழப்பு !

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயில் இரவு 9 மணிக்கு சென்று கொண்டிருந்தது. சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலை அரசு அலுவலர்கள் குடியிருப்பு அருகே சென்றபோது இளைஞர் திடீரென ரயிலில் இருந்து கீழே குதித்தார்.

இதில் சாலையில் விழுந்து தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த திருவல்லிக்கேணி காவல் துறையினரும், ரயில்வே காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து இளைஞரின் உடலைக் கைப்பற்றி ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.