POSCO: அரியலூரரில் 10ம் வகுப்பு மாணவனை காதலித்த ஆசிரியை போக்சோவில் கைது!

POSCO
ஆசிரியை போக்சோவில் கைது!

POSCO: அரியலூரரில் 10ஆம் வகுப்பு மாணவனை காதலித்த ஆசிரியை போக்சோவில் கைது செய்யப்பட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறுவதாக தொடர்ந்து எழுந்து வரும் புகாரின் அடிப்படையில் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் இது தொடர்கதையாகி வருகிறது.

இதனால் பள்ளிகளில் பாலியல் தொல்லை தொடர்பாக புகார் பெட்டி வைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. குறிப்பாக கோவையில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் தொல்லை தொடர்பாக தற்கொலை செய்துகொண்ட பிறகு தொடர்ந்து இது தொடர்பான புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதன் மூலம் பல நாட்களாக இதுபோன்ற விஷம வேலைகளில் ஈடுபட்டு வரும் நபர்கள், அதிரடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு வருகிறார்கள்.

இந்த சூழலில் அரியலூர் மாவட்டம் அம்பாபூரில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் தவறாக நடந்து கொண்டதாக ஆசிரியை ராசாத்தி என்பவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை ராசாத்தி காதல் என்ற பெயரில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் , இதுகுறித்து மாணவன் பெற்றோரிடம் தெரிவிக்கவே அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் ஆசிரியை ராசாத்தியை போலீசார் கைது செய்துள்ளனர். ஆசிரியையிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் மாணவனை காதலித்தது உண்மை என்று ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Group 4: குரூப் 4 பாடத்திட்டம் விரைவில் வெளியீடு