Crime: மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது

கள்ளக்காதலனை கொன்ற கணவர்
கள்ளக்காதலனை கொன்ற கணவர்

Crime: தர்மபுரி மாவட்டம் லிங்க்க நாயக்கனபள்ளி என்ற பகுதியில் உள்ள அரசு உயர் நிலையில் பள்ளியில் படித்து வரும் மாணவியின் கன்னத்தைக் கிள்ளிய கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் வகுப்பு கணிதத்தை தவறாக போட்டுள்ளார் மாணவி. ஆசிரியர் சேரன்(50) மாணவர்கள் முன்னிலையில் மாணவியின் கன்னத்தைக் கிள்ளி முதுகில் தட்டியுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் கூறினார். அவர்கள் போலீஸில் புகார் அளித்த நிலையில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடிபோதையில் பாலியல் சீண்டல் – சைல்டு ஹெல்ப் லைனால் சிக்கிய தந்தை

திருப்பத்தூர் அருகே 42 வயது நபர் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சொந்த மகளிடம் பல நாட்களாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார்ர். செய்வதறியாது திகைத்த சிறுமி மன உளைச்சலில் தவித்து வந்துள்ளார். இந்நிலையில், திருப்பத்தூரில் பாலியல் சீண்டல் குறித்து தகவல் தெரிவிக்க சைல்டு ஹெல்ப் லைன் 1098 எண் உள்ளது என்கிற விழிப்புணர்வை சமீப நாட்களாக மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிடோர் ஏற்படுத்தி வந்துள்ளனர்.

இதனை அறிந்த சிறுமி தந்தையின் பாலியல் சீண்டல் குறித்த தகவலை சைல்டு ஹெல்ப் லைன் 1098 என்கிற எண்ணை அழைத்து தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக திருப்பத்தூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலானோர் சிறுமியின் தந்தையிடம் நடத்திய விசாரணையில், குடிபோதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

சைல்டு ஹெல்ப் லைன் 1098 எண்ணுக்கான விழிப்புணர்வின் மூலம் சிறுமி தைரியமாக புகார் தெரிவித்த சம்பவம் அரசு அலுவலர்களின் நடவடிக்கைக்கு பாராட்டுகளை பெற்றுத் தந்துள்ளது.

teacher arrested for trespassing on student

இதையும் படிங்க: vacuum bomb : ரஷ்யா பயன்படுத்துவதாக உக்ரைன் கூறும் வெற்றிட குண்டு