தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
- செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை மத்திய அரசு, தமிழக அரசுக்கு ஒப்பந்த அடிப்படையில் அளிக்க வேண்டும்.
- தமிழக அரசுக்கு ஒப்பந்த அடிப்படையில் அளித்தால் உடனடியாக தடுப்பூசி உற்பத்திக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- தடுப்பூசி உற்பத்தி மையத்தை முழு சுதந்திரத்துடன் தமிழக அரசு இயக்க அனுமதி அளிக்க வேண்டும்.
- தனியார் நிறுவன உதவியுடன் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை செயல்படுத்துவோம்.



