நீட் அவசியம் தேவை- தமிழிசை சவுந்தரராஜன்

ஒரு மருத்துவர் என்ற முறையில் நீட் தேர்வு அவசியம் தேவை என்று தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநரும் மருத்துவருமான தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், “ஒரு மருத்துவர் என்ற முறையில் கூறுகிறேன், நீட் தேர்வு அவசியம் தேவை; மிகப்பெரிய மருத்துவக் கல்லூரி உரிமையாளரின் மகளாக இருந்தாலும் கூட நீட் தேர்வில் வெற்றி பெற்றால்தான் மருத்துவராக ஆக முடியும்” என கூறியுள்ளார்.