கவிஞர் பிரான்சிஸ் கிருபா காலமானார் !

பிரபல எழுத்தாளரும் ,கவிஞருமான பிரான்சிஸ் கிருபா உடல்நலக் குறைவால் காலமானார்.

தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு கூறும் படமான காமராஜர் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியதோடு அப்படத்திற்கு பாடல்களையும் எழுதியுள்ளார்.மேலும் இவர் வெண்ணிலா கபடிகுழு,அழகர்சாமியின் குதிரை, குரங்கு பொம்மை உள்ளிட்ட பல படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார்.

மேலும் இவர் சுஜாதா விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் நேற்று இரவு பிரான்சிஸ் கிருபா காலமானார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : டிக் டாக் திவ்யா கைது..