ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு நிதி உதவி செய்த சூர்யா

கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் வேலையின்றி வருமானமின்றி உள்ளனர். ஏழை மக்களுக்கு தமிழக அரசு, திரையுலக பிரபலங்கள், தொண்டு நிறுவனங்கள் தங்களால் முடிந்தளவிற்கு உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யா தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகள் 250 பேருக்கு தலா 5 ஆயிரம் நிதி உதவி வழங்கியுள்ளார். இதேபோல் கார்த்தியும் தன்னுடைய மன்ற நிர்வாகிகள் 150 பேருக்கு தலா 5000 வழங்கியுள்ளார்.

நிதி உதவி சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. இவர்களின் இந்த இன்ப அதிர்ச்சியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.