Dishti: கண்திருஷ்டி பற்றிய கலக்கம் இல்லாமல் வாழ இதை செய்யுங்கள்..!

sunday-remedy-for-dishti
கண்திருஷ்டி

Dishti: ஒருமுறை பரிகாரம் செய்து விட்டால் வாழ்நாள் முழுவதும் கண்திருஷ்டி இல்லாமல் நம்மால் நிச்சயம் வாழ முடியாது. கண்திருஷ்டி என்பது ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி வரக்கூடிய ஒரு எதிர்மறை ஆற்றல்.

ஒவ்வொரு முறையும் நெகட்டிவ் எனர்ஜியை, வாரத்திற்கு ஒரு முறை கழித்தே ஆக வேண்டும். அப்படி வாரத்திற்கு ஒரு நாள் கண் திருஷ்டி கழிக்க உகந்த நாள் என்றால் அது ஞாயிற்றுக்கிழமை. அப்படி இல்லை என்றால் மாதந்தோறும் வரக்கூடிய அமாவாசை தினத்திலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நல்ல பலன் கிடைக்கும்.

வாரந்தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். உங்கள் வீட்டில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் தூங்கிய பின்பு, ஊர் அடங்கிய பின்பு இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு. பூஜை அறையில் அமர்ந்து இந்த கண் திருஷ்டி எலுமிச்சம்பழத்தை தயார் செய்ய வேண்டும்.

கரும்புள்ளிகள் இல்லாத ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து நான்கு பாகங்களாக வெட்டி பிரித்துக்கொள்ள வேண்டும். நான்கு துண்டுகளாக கையில் எடுத்து விடக்கூடாது. இதற்கு உள்ளே சிவப்பு நிற குங்குமத்தை முதலில் தடவி விடுங்கள். அதன் பின்பு இந்த நான்கு பாகங்களாக வெட்டப்பட்ட எலுமிச்சம்பழத்தில் நடுவே கல் உப்பை வைத்துக் கொள்ளுங்கள். உப்புக்கு மேலே ஒரு கட்டி கற்பூரத்தை வைத்து ஏற்றி இதை உங்களுடைய வீட்டை சுற்ற வேண்டும். மூன்று முறை வீட்டை சுற்றி, சூடத்தை தரையில் போட்டுவிட்டு, உப்போடு இருக்கும் இந்த எலுமிச்சம் பழத்தை ஒரு காகிதத்தில் வைத்து மடித்து குப்பை கூடையில் போட்டு விடுங்கள்.

உங்களால் முடியும் என்றால், நான்கு பாகங்களாகப் பிரித்து வைத்திருக்கும் எலுமிச்சை பழ துண்டுகளை, நான்காக பிரித்து வீட்டுவாசலில் நான்கு திசைகளில் போடலாம். ஆனால் இன்று இருக்கும் சூழ்நிலையில் அக்கம்பக்கம் வீட்டில் இருப்பவர்கள் சண்டை போடுவார்கள் என்றால், இதை நீங்கள் குப்பை கூடையில் போட்டுக் கொள்வதே நல்லது.

ஒருவேளை உங்களுடைய வீட்டில் இருப்பவர்களுக்கு யாருக்கேனும் உடல்நிலை சரியில்லை. குழந்தைகள் சரியாக சாப்பிடவில்லை என்றால், அவர்களை அமர வைத்து அவர்களுடைய தலையை மூன்று முறை இந்த எலுமிச்சம் பழத்தை சுற்றி, இதே போல வீட்டு வாசலுக்கு கொண்டு வந்து கற்பூரத்தைப் போட்டு விட்டு எலுமிச்சம்பழத்தை குப்பை கூடையில் போட்டு விடுங்கள்.

வாரம் தோறும் தவறாமல் இந்த முறையில் திஷ்டி கழித்தால் எப்போதும் உங்கள் வீட்டிற்குள் வரும் கெடுதல், உங்கள் வீட்டு வாசலை தாண்டி வீட்டிற்குள் நுழையாமல் இருக்கும். கண் திருஷ்டி கெட்ட சக்தி தீய சக்தி எதுவும் உங்களுடைய சந்தோஷத்தை கெடுக்க முடியாது.

காலம் காலமாக அந்த காலத்தில் இருந்தே நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வந்த பழக்கம் இது. நம்மில் நிறைய பேர் இன்று இதை மறந்து விட்டோம். இதனாலேயே வீட்டில் நிறைய பிரச்சனை வருகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிங்க: Today Horoscope: இன்றைய ராசி பலன்