tn news: தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.தற்போது இந்த மூன்றாம் அலையில் பரவலை தடுக்க வார இறுதி நாளான ஞாயிற்று கிழமையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
கொரோனா மூன்றாம் அலை தாக்கம் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில் வருகிற ஜனவரி 28 முதல் இறுதி ஊரடங்கு ரத்து செய்ய இருப்பதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.tn news
ஜனவரி 28 ஆம் தேதியில் இருந்து இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாள் ஊரடங்கு ரத்து செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள் பிப்ரவரி 1 முதல் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.