NIT Campus: விடுதி அறையில் மாணவி எடுத்த விபரீத முடிவு

கணவன் வீட்டில் கழிப்பறையில்லாததால் பெண் தூக்கிட்டு தற்கொலை
கணவன் வீட்டில் கழிப்பறையில்லாததால் பெண் தூக்கிட்டு தற்கொலை

NIT Campus: திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி வளாக மாணவியர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவி விடுதி அறையில் தூக்கிலிட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இது குறித்து துவாக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருச்சி திருவெறும்பூர் அடுத்துள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் அகில இந்திய மற்றும் சர்வதேச அளவிலான மாணவ – மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில், பெரும்பாலான மாணவ, மாணவியர் என்ஐடி வளாக விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் காக்கிநாடா பான்குடியைச் சேர்ந்த அவளா சவுமியா தேவி (20) என்ற மாணவி, அங்கேயே தங்கியிருந்து பிடெக் சிவில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தடகள வீராங்கனையான இவருடன் திருவாரூரைச் சேர்ந்த தீட்சனா என்ற மாணவி தங்கி கல்வி பயின்று வருகிறார்.

இதையும் படிங்க: Crime: தேநீருடன் காலை உணவு வழங்காததால் மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமனார் கைது

இதையடுத்து நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் தீட்சனா வெளியில் சென்றுள்ளார். அவளாசௌமியா தேவி மட்டும் விடுதி அறையில் தனிமையில் இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து வெளியில் சென்றிருந்த தீட்சனா நேற்றிரவு விடுதிக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது அறையின் கதவு உள்பக்கம் தாளிலிடப்பட்டிருந்தது.இதையும் படிங்க:

இந்நிலையில், கதவை தட்டியும், சத்தமிட்டும் கதவை திறக்காததால் கதவை பலமாக ஓங்கி உதைத்துள்ளார் அப்போது கதவு திறந்துள்ளது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவளாசௌமியா தேவி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சயடைந்த தீட்சனா உடனடியாக விடுதி வார்டன் மற்றும் கல்லூரி நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்க வந்த துவாக்குடி போலீசார், ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து அங்கு வந்த கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். பின்னர் துவாக்குடி போலீசார் அவளாசௌமியா தேவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இதையும் படிங்க: Mount Everest: எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் உயிரிழந்த நபர்